06/Jul/2021 07:21:40
புதுக்கோட்டை, ஜூலை: புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை பகுதி வாரியாக முறையை நிறுத்தி பேருந்து புறப்படும் நேரத்தை பயணிகளுக்குத் தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை.முத்துராஜாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து புதுக்கோட்டை மாவட்ட பயணிகள் நலன் கருதி புதிய பேருந்து நிலையத்தில் கிழக்குப் பக்கம் செல்ல வேண்டிய பேருந்துகள் கிழக்கு பக்கமாகவும்,
அதேபோன்று தெற்கு, மேற்கு, வடக்கு பக்கம் செல்லவேண்டிய பேருந்துகள் அதே திசையில் நிற்க வேண்டியும், பேருந்துகள் புறப்படும் நேரங்களை பேருந்துகளில் குறிப்பிடும்படி நடவடிக்கை எடுக்க வேண்டுவதற்கான கோரிக்கை மனுவை சங்கத் தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் வழங்கினார்.
உடன் திமுக நகர செயலாளர் க.நைனாமுகம்மது, சங்க துணைச் ராஜாமுகம்மது, நிர்வாகக்குழுகள் உறுப்பினர் ராஜா முகம்மது,ரமேஷ், அப்புக்காளை, தன்வீர் முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்