logo
 மருத்துவமனையிலிருந்து  விஜயகாந்த்- பிரேமலதா வீடு திரும்பினர்

மருத்துவமனையிலிருந்து விஜயகாந்த்- பிரேமலதா வீடு திரும்பினர்

02/Oct/2020 08:09:49

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அக்.2 மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். 

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே இருவரும் மருத்துவமனையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருவரும் மருத்துவ சிகிச்சைக்கு தொடர் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், இதனால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர்  வெள்ளிக்கிழமை  மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.

Top