logo
மொடச்சூர் ஊராட்சியில் ரூ.30.50 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்:அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்

மொடச்சூர் ஊராட்சியில் ரூ.30.50 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்:அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்

05/Jul/2021 01:17:16

ஈரோடு, ஜூலை:  ஈரோடு மாவட்டம், கோபி அருகில் உள்ள மொடச்சூர் ஊராட்சியில்  ரூ.30.50 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி  தொடக்கி வைத்தார்.

 மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார். கோபி ஆர்.டி.. பழனிதேவி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் வரவேற்றார்தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சுற்றுச்சுவர் கட்டுதல், 5 இடங்களில் வடிகால் அமைத்தல் என ரூ.30 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான திட்டப்பணிகளை பூமிபூஜையுடன் தொடங்கி வைத்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் அவருடைய சொந்தநிதியில் இருந்து கொரோனோ நிவாரணத்திற்காக முதல்அமைச்சரின் நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை அமைச்சரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது,அங்கிருந்த தூய்மை பணியாளர்கள், தூய்மைபணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்ந்து .தி.மு..வில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் தி.மு..வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, ஈரோடு வடக்குமாவட்ட தி.மு.. செயலாளர் என்.நல்லசிவம், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன், குமணன், சிந்துரவிச்சந்திரன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்தி.மு..வினர்கலந்து கொண்டனர்.

Top