logo
கொரோனா நிவாரண  உதவிக்காக ஈரோடு கன்னடிய நாயக்கர் சங்கம் சார்பில் காங்கிரஸ் எம்எல்ஏ-விடம் ரூ.1.50 லட்சம் அளிப்பு

கொரோனா நிவாரண உதவிக்காக ஈரோடு கன்னடிய நாயக்கர் சங்கம் சார்பில் காங்கிரஸ் எம்எல்ஏ-விடம் ரூ.1.50 லட்சம் அளிப்பு

03/Jul/2021 06:49:03

ஈரோடு, ஜூலை: ஈரோடு கன்னடிய நாயக்கர் சங்கம் சார்பில் காங்கிரஸ் எம்எல்ஏவிடம் கொரோனா நிவாரண  உதவிக்காக ரூ.1.50 லட்சம்  தொகை அளிக்கப்பட்டது.

ஈரோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்திட  ஈரோடு கன்னடிய நாயக்கர் சங்கத்தின் சார்பில் ரூ. 1,50,000 தொகைக்கான காசோலையை ஈரோடு கன்னடிய நாயக்கர் சங்கத்தின் தலைவர் எஸ்ஆர்.எல். ராம்கண் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவிடம்  வழங்கினார்.

இந்நிகழ்வில் சங்கத் தலைவருடன் சங்கத்தின் செயலாளர் ஆர்.வெங்கடேசன், பொருளாளர் எம்.கே. லோகையன், துணைத் தலைவர் டாக்டர் ஜெ. இளவரசன் மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், ஜெய் ராமசாமி, கார்த்திக் ராம்கண், விஜயகண்ணா ஆகியோர்  உடனிருந்தனர்.

Top