logo
சென்னிமலையில்  கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று இயற்கை மரணம் என நாடகமாடிய மனைவி கைது

சென்னிமலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று இயற்கை மரணம் என நாடகமாடிய மனைவி கைது

01/Jul/2021 10:38:04

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டம், சென்னிமலையில்  கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்றுவிட்டு  இயற்கை மரணம் என நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்தனர். 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அருகே உள்ள காவிரிபுரம் தெலுங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 35). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

குழந்தைவேல்  ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் நல்லமுத்தாம் பாளை யத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி குழந்தைவேல் தனது வீட்டில் மர்மமான முறையில் இருந்த கடந்தார். குழந் தைவேலு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளார். அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து குழந்தைவேலின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தெலுங் கனூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது குழந்தைவேலுவின் உடலில் காயங்கள் இருப்பதை அவருடைய அண்ணன் மாதேஷ் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் குழந்தை வேலின் சாவில் சந்தேகம் இருப்பதாக சென்னிமலை போலீசில் அவருடைய அண்ணன் மாதேஷ் புகார் அளித்தார்.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைவேலின் மனைவி தனலட் சுமி, அவர்களது உறவினர்களிடம், அக்கம்பக்கத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் குழந்தைவேலு மனைவி தனலட்சுமி நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை யடுத்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தனலட்சுமி தனது கள்ளக்காதலனுடன் சேர் ந்து கணவர் குழந்தைவேலுவை கொன்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது: குழந்தைவேலு கொரோனா தாக்கம் காரணமாக வேலை ஏதும் இல்லாமல் தனது வண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். அப்போது  சாணார் பாளை யம் அடுத்த நுங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த கவியரசு (35) என்பவர் பழக்கமானார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்நிலையில் குழந்தைவேலுக்கு  உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  நண்பர் குழந்தைவேலுவை  பார்க்க கவியரசு அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது கவியரசுக்கும், குழந்தைவேல் மனைவி தனலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 

இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி கவியரசு, தனலட்சுமி இருவரும் குழந்தை  வேலுவை கொல்ல சதி திட்டம் தீட்டினர். இதையடுத்து கடந்த 28-ஆம் தேதி இரவு குழந்தைவேலு வீட்டில் வழக்கம் போல் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கவியரசு தனலட்சுமி உடன் இணைந்து குழந்தைவேலுவை கழுத்தை நெறித்து கொலை செய்தனர்.

பின்னர் கவியரசு அங்கிருந்து சென்று விட்டார். தனலட்சுமி ஒன்றும் தெரியாதது போல் கணவர் உடல்நிலை சரி இல்லாமல் இறந்து விட்டதாக அழுது நாடகம் ஆடியுள்ளார். ஆனால் குழந்தை வேலு கழுத்தில் காயம் இருப்பதை கண்டு அவரது அண்ணன் மாதேஷ் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸ் விசாரணையில் இருவரும் சிக்கிக் கொண்டதாக போலீசார் கூறினர்.

தனலட்சுமி , கவியரசு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கவியரசு கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும், தனலட்சுமி கோவையில் உள்ள பெண்கள் மத்திய சிறையிலும் அடைக்கப் பட்டனர். இதில் குழந்தைவேலுவின், மகனும் மகளும் அனாதையாகி நிற்கின்றனர். கள்ளக்காத லுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Top