01/Jul/2021 09:15:49
புதுக்கோட்டை, ஜூலை: சட்டப்பேரவை உறுப்பினர், திமுக இளைஞரணி உதயநிதி ஸ்டாலினிடம் ஆயூஷ் மருத்துவர்கள் சார்பில் முதல்வர் கொரோனா நிதி ரூ. 60,000 வழங்கப்பட்டது.
தமிழக அரசின் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையதிலும் அவுட்சோர்சிங் மூலமாக பணிபுரியும் ஆயூஷ் மருத்துவர்கள் சார்பாக தற்போது நிலவி வரும் கொரோனா பெரும் தொற்று காலத்தில் சிறப்பாக தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் தமிழக அரசின் செயல்பாடுக ளுக்கு நன்றியையும் தெரிவித்தோம்.
அரசு மருத்துவ மனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்க ளிலும் பணிபுரியும் 118 ஆயூஷ் மருத்துவர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியம் ரூ.60,000 -க்கான காசோலையை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா முன்னிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் முதல்வர் கொரோனா நிவாரண நிதியும், கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது.
மேலும் கிராமப்புறங்களில் சிறப்பான மருத்துவ சேவையினை ஆயூஷ் மருத்துவர்கள் அளித்து வரும் தங்களுக்கு மிக குறைந்த ஊதியம் வழங்கபடுவதை மேலும் உயர்த்தி வழங்கிடவும் ஆயூஷ் மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்திடவும் தமிழக முதல்வர் ஆயூஷ் மருத்துவர்களின் கோரிக் கைகளை நிறைவேற்றி தருவார்கள் என்று நம்புவதாகவும் ஆயுஷ் மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.