logo
பீடி பற்ற வைக்கும்போது கேஸ் லைட்டர் வெடித்து முதியவர் பலி

பீடி பற்ற வைக்கும்போது கேஸ் லைட்டர் வெடித்து முதியவர் பலி

26/Dec/2020 08:51:07

ஈரோடு, டிச:  ஈரோடு அடுத்த நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(60). இவர் கடந்த சில வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 27-ஆம் தேதி கோவிந்தசாமி படுக்கையில் இருந்தபடி பீடி பற்ற வைக்க கேஸ் லைட்டரை பயன்படுத்தினாராம்.

அப்போது எதிர்பாரதவிதமாக லைட்டர் வெடித்து அவரது ஆடையில் தீப்பற்றியது. கோவிந்தசாமியின் கால், அடிவயிறு, முதுகின் பின்புறம் தீயில் கருகியது. இதனால் வலியால் அலறி துடித்த கோவிந்தசாமியை அவரது குடும்பத்தினர் மீ்ட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோவிந்தசாமியின் மருமகன் நந்தீஸ்வரன்  அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Top