logo
புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையத்தில் மின் விநியோகம்  நடைபெறும் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையத்தில் மின் விநியோகம் நடைபெறும் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

20/Jun/2021 09:19:53

புதுக்கோட்டை, ஜூன்:   புதுக்கோட்டை (110/ கேவி) சிப்காட் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் மின் பாதைகளில் அவசரகால பராமரிப்பு நடைபெற இருப்பதால்  காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பின் வரும் அந்தந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இது குறித்து புதுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் ( இயக்குதல் / காத்தல் -கிராமியம்) எஸ்.கண்ணன் வெளியிட்ட தகவல் :

21.6.2023- இல்  சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, சிட்கோ தொழிற்பேட்டை, ரெங்கம்மா சத்திரம், கே.கே.நகர், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

22.6.2021 -இல்  பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், மச்சுவாடி ஜீவாநகர், சிட்கோ தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்  தடை ஏற்படும். 

 24.6.2021 -இல்  வடசேரிப்பட்டி வாகவாசல் முள்ளூர், இச்சடி, வடவாளம் புத்தாம்பூர் செம்பாட்டுர். கேடயப்பட்டி செட்டியாபட்டி ராயப்பட்டி, காயாம்பட்டி மேலக்காயாம்பட்டி வேப்பங்குடி  ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். 

 25.6.2028 -இல்  முத்துடையான்பட்டி கீழமுத்துடையான்பட்டி, வெள்ளனூர், கிளியூர், மேலூர், அம்மன்பேட்டை, இரும்பாளி, கூத்தினிப்பட்டி, உடையாண்டிபட்டி, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில்  காலை 10  மணிமுதல் மதியம் 1 மணிவரை மின்வினியோகம் இருக்காது. இந்த மின் தடைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Top