logo
புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள்

புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள்

01/Oct/2020 02:03:08

புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் மகாத்மா காந்தியின் 151 -ஆவது பிறந்தநாள் விழா புதுக்கோட்டை காந்தி பூங்காவில் (அக்.2) வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காந்தி பூங்காவிலுள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.   இதையடுத்து, நடைபெற்ற நிகழ்ச்சியில்,  வாசகர் பேரவை ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மருத்துவர் எஸ்.ராம்தாஸ் பங்கேற்று  வாசகர் பேரவை சார்பில்   மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு  மகாத்மா காந்தியின் சுயசரிதை சத்திய சோதனை- நூல்களை வழங்கினார். பள்ளியின்  ஆசிரியர்கள் ப.மகேஸ்வரன், என்.சரவணன் ஆகியோர் 25 நூல்களைப் பெற்றுக்கொண்டனர். நிகழ்வில், எஸ்.ஆரோக்கியசாமி,. வாசகர் பேரவை பொருளாளர் முனைவர் ஏ.எஸ்.நாகேஸ்வரன், ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் சி.சேதுராமன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். ஏற்பாடுகளை, வாசகர் பேரவை செயலாளர் பேராசிரியர் சா.விஸ்வநாதன் செய்திருந்தார். மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  இன்ஸ்பயர் விருதுகள் மற்றும் தேசிய திறனறித் தேர்வுகளில் தொடர்ச்சியாக  வெற்றி பெற்று வருவது குறித்தும் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.  


Top