logo
தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

11/Jun/2021 10:08:02

சென்னை. ஜூன்:  கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில்  25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு 30-6-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்களுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட பெருந்தொற்று  ஆலோசனையின் அடிப்படையில்,கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.

இந்த ஊரடங்கு வரும் 14-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில் நோயத் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்றுபரவாமல் தடுத்து, மக்களின்  விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 14-6-2021 முதல் 21-6-2021 காலை 6  மணி வரை ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

இந்த ஊரடங்கின்போது செயல்பட  அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில்கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்கடைகளின் நுழை வாயிலில், கை சுத்தம் செய்ய பயன்படுத்தும்   (hand sanitizer with dispenser)  வைக்கப்படுவதோடு,

வாடிக்கையாளர் கட்டாயமாக  (thermal screening) கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணி புரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப் பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்ஏற்கெனவே இந்த ஊரடங்கின் போது,   அனைத்து  செயலபாடுகளும்  அனுமதிக்கப்படும்.

நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள  கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடுமயிலாடுதுறை, சேலம், நாகப்பட்டினம்   ஆகிய 11 மாவட்டங்களில் நோய்த் தொற்று   அதிகமாக பாதிக்கப்பட்டுளளதை  கருத்தில் கொண்டும். அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் ஏற்கெனவே உள்ள தளர்வுகளுடன் மேற்காணும் மாவட்டங்களில் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 14-6-2021 முதல் அளிக்கப்படுகிறது.

 தற்போதுதனியார் அலுவலகம், வீடு பாதுகாப்பு, வீடுகள் பராமரிப்பு சேவை  நிறுவனங்கள்மின் (Electricians), பணியாளர், கணினி மற்றும் இயந்திரங்கள்(MotorTechnicians)  மற்றும் தச்சர் அடுக்குமாடி சேவைகள் மற்றும் குடியிருப்புகளில் (Housekeeping) பிளம்பர்கள் பழுது (Plumbers), நீக்குபவர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர்கள் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9 மணி முதல் 5 மணி வரை - பதிவுடன் அனுமதிக்கப்படுவர். எனினும் இவ்வகை. கடைகள் திறக்க அனுமதியில்லை.

வாகனங்கள் பழுது (விற்பனை அல்ல) , மிதிவண்டி மற்றும் கடைகள்    காலை 9 முதல் மதியம் 2 மணிவரை னுமதிக்கப்படும். வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் -பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும்.

மேலும், வாடகை டாக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும். வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump set) பழுது இருசக்கர பழுது நீக்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம்மணி வரை  செயல்பட அனுமதிக்கப்படும்.

கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 முதல் மதியம் 2 வரை அனுமதிக்கப்படும் மண்பாண்டம் மற்றும் கைவினை பொருள்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.   ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து  வழங்கும் நிறுவனங்கள்  50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.

அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்

அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.

வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump set) பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி  கண்கண்ணாடி விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படும்.

 மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின்பழுது நீக்கும் கடைகள்  காலை 6 மணி முதல் மதியம் 2.00 மணி வரை  செயல்பட அனுமதிக்கப்படும்.

டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனுமதி செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

 கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மிக்ஸி, கிரைண்டர், டி.வி. பிரிட்ஜ் உள்ளிட்ட உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் வீட்டு கடைகள் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி  வரை  செயல்பட அனுமதிக்கப்படும்.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதிக்கப்படும்ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு நிருவாகப் பணிகள். ஏற்றுமதி இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

இதர தொழிற்சாலைகளும் 33 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நான்கு வாகனங்களில் பணிக்கு செல்ல ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர்தற்போது அவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களிலும் தொழிற்சாலைகளுக்கு  பணிக்கு சென்று வர -பதிவு மற்றும் அலுவலக அடையாள அட்டையுடன்  அனுமதிக்கப்படுவர்.

தகவல் தொழில்நுட்பம் - தகவல் கொழில்நுட்ப சேவை  நிறுவனங்களில் 20 சதவிகிதம் பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர். வீட்டு வசதி நிறுவனங்கள் நிறுவனம் (NBFCs) நிறுவனங்கள் 33 சதவிகித அனுமதிக்கப்படும். பொது (HFCs)  மற்றும் வங்கி சாரா நிதி, காப்பீட்டு நிறுவஙை்கள் அனைத்து பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம்,  சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு அணிவதுஅடிக்கடி  சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், உடனே அருகிலுள்ள பொதுமக்கள் மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட நல்கி வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

 

Top