logo
அதிமுக செயற்குழுவில் பேசியதை வெளியே கூறுவது அநாகரீகம்- அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

அதிமுக செயற்குழுவில் பேசியதை வெளியே கூறுவது அநாகரீகம்- அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

01/Oct/2020 11:06:58

by c.raaj,erode ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது

இது வரை அரசு் பள்ளியில் 15 லட்சத்து 50 ஆயிரம்  மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டம் கீழ் மாணவர் சேர்க்கைக்கான தேதி இந்தியா முழுவதும் ஒரே மாதிரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தான் கால நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும். அதிமுக செயற்குழுவில் பேசியது குறித்து வெளியே கருத்து கூறுவது நாகரீகமாக இருக்காது.

புதிய கல்வி கொள்கை குறித்த ஆய்வில்  நற்சான்றிதழ் பெற்ற ஆசிரியர் உள்ளார்.சாரணர் இயக்கம் மாணவர் நல்வழி படுத்தவும் தேச பக்தியை ஏற்படுத்தவும் பள்ளி கல்வித்துறை மூலமாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நூலகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும் என்றார் அவர்.

Top