logo
ஈரோட்டில் பத்திரிக்கை மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பெருட்களை அமைச்சர் வழங்கல்

ஈரோட்டில் பத்திரிக்கை மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பெருட்களை அமைச்சர் வழங்கல்

07/Jun/2021 08:19:40

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பத்திரிக்கை மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி பைகளை  வீட்டுவசதி துறை  அமைச்சர் சு. முத்துசாமி வழங்கினார்.

முன்களப்பணியாளர்களான பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா நிவாரண உதவி செய்யக்கோரி ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளான  செயலாளர் ஜீவாதங்கவேல்தலைவர் ரமேஷ், பொருளாளர் ஆர். ரவிச்சந்திரன்  மற்றும் முன்னாள் தலைவர் சண்முகம், துணை தலைவர்கள் சுப்பிரமணியம், மூர்த்தி, துணை செயலாளர் நவீன்.

செயற்குழு உறுப்பினர்கள் விஜய்சாய்,பழனிச்சாமி, மகேந்திரன்,கோவர்த்தன், ராஜேஸ்நேதாஜி,பார்த்திபன்,வேலுசாமி, மோகனசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள்    தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில்  ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையை சேர்ந்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு 25 கிலோ அரிசி  பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படகலைஞர் களுக்கும் இலவசமாக அரிசி பைகளை வழங்கினார்.

Top