06/Jun/2021 09:31:48
புதுக்கோட்டை, ஜூன்: ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் த.ஜீவன்ராஜ், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
ஆனால், அவர்களுக்கு கடந்த
ஆண்டு ஆகஸ்ட்(2020) முதல் ஊதியம் வழங்கப்படவில்லை.
மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால்
அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பேரிடர் காலத்தில் அவர்கள்
குடும்பத்தை நடத்த வழியின்றி தவித்து வருகின்றனர்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 1400-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளார்.