logo

கொரோனா ஊரடங்கு முடியும் வரை மின்வாரிய பாரமரிப்பு பணிகள் ஒத்தி வைப்பதாக மின்வாரியம் அறிவிப்பு

02/Jun/2021 10:41:32

சென்னை, ஜூன்: கொரோனா ஊரடங்கு முடியும் வரை மின்வாரிய பாரமரிப்பு பணிகள் ஒத்தி வைப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக  தமிழகம் முழுவதும் 07.06.2021 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருப்பதாலும் அலுவலகங்களில் பணிபுரிவோர் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாலும், மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள்-தேர்வுகள் நடப்பதாலும். தடையில்லா மின்னாரம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராணிப்பு பணிகளுக்காக கொடுக்கப்படும் பின்தடைக்கான அனுமதி கொரோனா ஊரங்கு  முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த (2020) டிசம்பர் மாதம்  முதல்  6 மாத காலமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. தற்பொழுது மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், பராமரிப்பு பணிகள் எவ்வித தொய்வின்றி விரைந்து  மேற்கொள்ளப்படும் என  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Top