02/Jun/2021 08:54:32
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் அறக்கட்டளை சார்பில் கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 35 திருநங்கைகளுக்கு, தலா ரூ 500 மதிப்பாலான, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் அறக்கட்டளை அனுப்பினர்கள் சீனிவாசன், அ.சோனைக் கருப்பையா, புதுக்கோட்டை மரம் நண்பர்கள், பாரதவிலாஸ் கிருஷ்ணமூர்த்தி, சக்தி விநாயகா, முத்தையா, பழனியப்பா கண்ணன், மொபைல் ராஜூ, பொறியாளர் ரியாஸ்கான், பொறியாளர் இறையன்பு, ராம்பாபு ஆகியோர் கலந்துகொண்டு பொருள்களை வழங்கினர்.
நிகழ்வை, மரம் நண்பர்களின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி. எட்வின் மற்றும் பேராசிரியர் எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் ஒருங்கிணைந்திருந்தனர். சோதனை காலத்தில் செய்த இந்த உதவிக்காக திருநங்கைகளின் தலைவி சிவானி நன்றி கூறினார்.