logo
  ஊதியமின்றி  பணியாற்றும் அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள்/பூசாரிகள், பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித் தொகை:  தமிழக அரசு அறிவிப்பு

ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள்/பூசாரிகள், பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித் தொகை: தமிழக அரசு அறிவிப்பு

31/May/2021 07:16:38

சென்னை, மே: தமிழகத்திலுள்ள கோயில்களில் ஊதியமின்றி  பணியாற்றும் அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள்/பூசாரிகள், பணியாளர்களுக்குரூ.4 ஆயிரம் உதவித் தொகையும், 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்படுமென  தமிழக அரசு அறிவித்துள்ளது.

 இது குறித்துஇந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  வெளியிட்ட தகவல்இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 16,066-க்கும் மேற்பட்ட இருக்கோயில்கள் உள்ளன. அவற்றில் சுமார் 34,000 கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ.10,000 - க்கும் கீழ் உள்ளவை ஆகும். 12,959 இருக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம்  செயல் அரசால் படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கண்ட இருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு நிலையான சம்பளம் ஏதும் வழங்கப்படுவதில்லை. கொரோனா நோய் பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்கள் வருகை இல்லாததால் போதிய வருமானமின்றி அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள்/பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

பக்தர்கள் வருகையின்மையால் கோயில்களில் மாத ஊதியம்  இல்லாமல் பணிபுரியும் திருக்கோயில் ஊழியர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கிட வேண்டும் என்ற  கோரிக்கை தமிழக முதல்வர் ஸ்டாலினின்  கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுகோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலித்த முதல்வர்திருக்கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் திருக்கோயில்களில் மாத ஊதியம்  பெறாமல் பணியாற்றும் ஒவ்வொரு  ஊழியருக்கும் ரூ.4,000 - உதவித்தொகை. 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு ஆணையிட்டுள்ளார்.

மேலும் இந்த உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் இருக்கோவில் பணியாளர் அல்லாத திருக்கோயில் ஊழியர்கள் மற்றும் திருக்கோயில் மூலம் உரிமம் பெற்ற இதர பணியாளர்கள் பயனடைவார்கள்இத்திட்டம் முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் பிறந்தநாளான  ஜூன்3- ஆம் தேதி  முதல்வரால் தொடங்கி வைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 

Top