logo
கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்

கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்

30/Sep/2020 05:42:27


மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கரோனா தொற்றில் இருந்து மீண்டதாக புதன்கிழமை தெரிவித்தார்.


இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்ட தகவல்: உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், வாழ்த்துக்களாலும், நான் கரோனாவிலிருந்து மீண்டுள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், உங்கள் அனைவரின் பாசத்திற்கு நன்றி  என அதில் குறிப்பிட்டுள்ளார்.

நிதின் கட்கரிக்கு கடந்த செப்டம்பர் 16 -ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 


Top