22/May/2021 06:17:46
ஈரோடு, மே: சேலத்தில் கொரனோ தொற்றால் மரணமடைந்த ஜூ.வி. மூத்த புகைப்பட கலைஞர் விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனித நேய உதவிக்கு ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்ட தகவல்:
சேலத்தில் கொரனோ தொற்றால் மரணமடைந்த
ஜூ.வி. மூத்த புகைப்பட கலைஞர்
விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு,
நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த மாண்புமிகு
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சொந்தப் பொறுப்பில் ரூ.
2 லட்சத்தை உடனடியாக வழங்கியுள்ளார் மேலும் அரசு நிவாரணத்திற்கும் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் அவர்களின் செயல் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.அமைச்சரின் உதவிக்கு நன்றியும்
பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறோம்.
அதேநேரத்தில் இந்த சிறிய நிவாரணமானது அந்த குடும்பத்திற்கு போதாது.இதேபோல் கொரோனாவின் கோரப்பிடிக்கு தொடர்ந்து செய்தியாளர்கள் பலியாகி வருகின்றனர். முனகள பணியாளர் என்ற அடிப்படையில் உயிரிழக்கும் செய்தியாளர்களின் குடும்பத்திற்கு அரசின் முழு நிவாரணம் வழங்க வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதிகேற்ப அரசு பணி வழங்க வேண்டும்.இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதே கருத்தை புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கமும் வழிமொழிந்துள்ளது.