logo
ஈரோடு அரசு பெண்கள் மேனிலைப் பள்ளிக்கு  உழவர் சந்தை இடமாற்றம்: பரிசோதனைக்குப்பிறகே மக்கள் அனுமதி

ஈரோடு அரசு பெண்கள் மேனிலைப் பள்ளிக்கு உழவர் சந்தை இடமாற்றம்: பரிசோதனைக்குப்பிறகே மக்கள் அனுமதி

21/May/2021 06:35:03

ஈரோடு, மே: ஈரோடு அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்துக்கு  உழவர் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை  பரிசோதனைக்குப்பிறகே  பொருகள் வாங்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக ஈரோடு சம்பத் நகரில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமா மாற்றப்பட்டு செயல்படத் தொடங்கியது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து தாக்கம் குறைய தொடங்கியதும் மீண்டும் சம்பத் நகர் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வந்தது. உழவர் சந்தை பொருத்தவரை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை நேரடியாக இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மற்ற இடங்களை விட இங்கு காய்கறி விலை குறைவாக இருப்பதால் மக்கள் கூட்டம் எப்போதும் இருக்கும்.


இந்நிலையில் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் பரவத் தொடங்கியது. தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த தகவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மீண்டும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் 12 - ஆம் தேதி ஈரோடு சம்பத் நகரில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி குமலன்குட்டையில் உள்ள மாநகராட்சி ஆரம்பபள்ளி வளாகத்திலும்மற்றொரு பகுதி பெரியார் நகர் பகுதியிலும், மூன்றாவது பகுதி சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தை பகுதிகளில் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சம்பத் நகரில் இயங்கி வந்த உழவர் சந்தை ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படிபள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டன. காய்கறி கடைகள் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நேற்று  நடந்தது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை விவசாயிகள் கடை போடுவதற்காக பள்ளி வளாகத்திற்கு வந்தனர்.

முதல் நாளன்று  44 காய்கனி கடைகள் போடப்பட்டிருந்தன. காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி நுழைவாயிலில் பொதுமக்களுக்கு  கிருமிநாசினிகள்வழங்கப்பட்டன. முக கவசம் அணியாமல் வந்த மக்களுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டதுதெர்மல் ஸ்கேனர் மூலம்  பொது மக்களின் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனைகளுக்கு பிறகே பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

காலை 6 மணி முதல் 9 மணி வரை காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். அதே நேரத்தில் குமலன் குட்டை, பெரியார் நகரில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை மறுஅறிவிப்பு வரும் வரை செயல்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

                                                   

Top