18/May/2021 06:45:49
ஈரோடு, மே: ஈரோடு மாவட்ட நிர்வாகம் தனியார் ஆம்புலன்ஸ் ஊர்திகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதன் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் 50-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் ஊர்திகள் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் இயக்கப்படுகிறது. இதற்கு தனியாரிடம் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தனியார் ஆம்புலன்ஸ் ஊர்திகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதில் தொய்வு ஏற்பட்டது. மேலும், தனியார் ஆம்புலன்ஸ் ஊர்திகளுக்கு ஆக்சிஜன் வழங்க மாவட்டம் நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதாக தெரிகிறது.
எனவே ஆக்சிஜன் வசதி இல்லாததால் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் சிரமம்
ஏற்பட்டுள்ளதாக உள்ளதாக
தனியார் ஆம்புலன்ஸ் ஊர்தி நிர்வாகிகளும் ஓட்டுனர்களும்
வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே தனியார் ஆம்புலன்ஸ் ஊர்திகளுக்கு வழக்கம்போல் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.