27/Apr/2021 08:08:32
ஒரு கொரோனா தொற்றுள்ள நபர் சமூக இடைவெளி வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அவரால் 30 நாட்களில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம். தொற்று பாதித்த நபர் 50% சமூக இடைவெளியை பின்பற்றினால் அவரால் 406 நபர்களுக்கு பதிலாக 15 பேர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்.
தொற்று பாதித்த நபர் 75% சமூக இடைவெளியை பின்பற்றினால் அவர் மூலம் கொரோனவால் பாதிக்கப்படுபவர்கள் வெறும் 2 பேர் மட்டுமே. கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் மில்லியன் கணக்கானவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும்.
சமூக இடைவெளி என்பது ஒரு சமூக தடுப்பூசி மாதிரி. அனைவரும் சமூக இடைவெளியை மறக்காமல் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.