logo
பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

28/Sep/2020 04:50:38

 ஈரோடு:   ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக  நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் அருந்ததியர் இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர் வடிவேல்ராமன் தலைமையில் நிர்வாகிகள்  செலுத்திய மனு விவரம்:

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்த நஞ்சைஊத்துக்குழி பகுதியில் சுமார் 100 ஏக்கர் தரிசு நிலத்தை நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் நில சீர்திருத்த துறை மூலம் இப்பகுதியில் உள்ள பட்டியலின மக்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் சுமார் 100 நபர்களுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு நில ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.மேற்கண்ட நிலங்கள் தரிசு நிலமாக உள்ளதால் பாசன வசதி இல்லை இதனால் இங்கு எவ்வித பணியும் மேற்கொள்ளாமல் உள்ளது இந்நிலையில் வேறு சிலர் குறைந்த விலைக்கு இந்த நிலத்தை எழுதி வாங்கி விட்டார்கள் தற்போது இந்த இடத்தில் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. வருவாய் துறை ஆவணங்களில் நில ஒதுக்கீடு பெற்ற பட்டியலின மக்களின் பெயர் உள்ளது எனவே இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.மேலும் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இங்கு அரசு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு போதுமான நிலத்தை  மாவட்ட நிர்வாகம் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Top