26/Apr/2021 07:11:07
புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபான கூடங்கள், FL3 உரிமம் பெற்ற உணவகங்கள் மற்றும் அரசு மதுக்கூடங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இரண்டாவது அலை தீவிரமாக பரவுவதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான கூடங்கள், FL3 உரிமம் பெற்ற உணவகங்கள் மற்றும் அரசு மதுக்கூடங்கள் 26.4.2021 காலை 4 மணி முதல் மறு உத்தரவு வ ரும் வரை கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் FL3 உரிமம் உணவகங்கள் மற்றும் அரசு மதுக்கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்