19/Apr/2021 01:24:42
ஈரோடு ஏப்: ஈரோடு-சேலம் மாவட்டங்களை இணைக்கும் பாலம் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளதால் பாலத்தை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் பவானியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளரிடம் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் ஈரோடு- சேலம் மாவட்டப் பகுதிகளை இணைக்கும் வகையில்
பவானி ஆற்றில் இரண்டு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பாலத்தின் சாலை
பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழும்
நிலையில்
உள்ளன. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.
பாலத்தின் பகுதியில் குண்டும்
குழியுமாக இருப்பதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருப்பதாகவும் பாலத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பவானி காளிங்கராயன்பாளையம் லட்சுமி நகர் ஆட்டோ ஓட்டுனர்கள் தேசிய நெடுஞ்சாலை உதவி
பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை
பெற்று கொண்ட உதவி பொறியாளர் உரிய
நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.