19/Apr/2021 06:55:59
ஈரோடு, ஏப்: ஈரோட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 3 கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த 5 நாட்களாக மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 100 -ரை கடந்து வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதார
துறையினர்
ஒருங்கிணைந்து தடுப்பு
நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், மாநகராட்சி
ஆணையாளர் மா. இளங்கோவன், அவ்வப்போது வணிக
நிறுவனங்கள், கடைகள் ஹோட்டல்கள், டீ கடைகளில் சென்று ஆய்வு செய்து. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை
பின்பற்றாத நிறுவனங்களை பூட்டி சீல் வைத்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர் மா. இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் பெரியவலசு நால்ரோடு, சூளை பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகள், இறைச்சி கடைகள், டீ கடைகள் போன்றவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பெரிய வலசு நால்ரோடு பகுதியில் உள்ள 2 பேக்கரி, சூளை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பேக்கரி கடையில் சோதனை செய்தபோது கொரோனா பாதுகாப்பு தடுப்பு முறைகள் முறையாக பின்பற்றவில்லை என தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளுக்கு தலா 5000 வீதம் 15,000 அபராதம் விதித்து. அந்த 3 கடைகளையும் பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அந்த 3 பேக்கரி கடையும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இறைச்சி கடைகள், டீ கடைகள், அந்த பகுதியில் உள்ள கோவில்களையும் ஆய்வு செய்தார்.
அதேபோல் சமூக இடைவெளி கடை பிடிக்காதவர்கள், முக கவசம் அணியாமல் வந்தவர்கள் என 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் இன்று காலை மட்டும் ரூ .20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் டாக்டர் முரளி சங்கர், துப்புரவு ஆய்வாளர் கண்ணன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக வெளியே வரும்போது முகம் கண்டிப்பாக அணிந்து வரவேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மா.இளங்கோவன் தெரிவித்தார்.