logo
புதுக்கோட்டை மவுன்ட்சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயபாரதன்செல்லாயா காலமானார்

புதுக்கோட்டை மவுன்ட்சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயபாரதன்செல்லாயா காலமானார்

18/Apr/2021 11:04:21

புதுக்கோட்டை, ஏப்.18:  புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச்சேர்ந்தவர் ஜெயபாரதன் செல்லையா(74). இவர் கடந்த 1984-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் மவுன்ட்சீயோன் பள்ளியை தொடங்கினார்.

இதையடுத்து  திருமயம் அருகே லெணாவிலக்கில் மவுன்ட் சீயோன் பொறியியல் கல்லூரி யை கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். இதைத்தொடர்ந்து கடந்த 5 ஆண்டு களுக்கு முன்  மவுன்ட்சீயோன் இன்டர்நேஷனல் பள்ளியையும் தொடங்கினார். 

இக்கல்வி நிறுவனங்களை இவரது மனைவி பிளாரன்ஸ்ஜெயபாரதன், மகன்கள் ஜோனத்தன்ஜெயபாரதன், ஜெய்சன்ஜெயபாரதன் ஆகியோர்  நிர்வகித்து வருகின்றனர்.

உடல்நலக்குறைவால் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயபாரதன்தன்செல்லையா சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் காலமானார். இவரது இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. 


Top