logo
வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா இயங்கவில்லை: திருமயம்  தொகுதி திமுக வேட்பாளர்  ரகுபதி புகார்

வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா இயங்கவில்லை: திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி புகார்

18/Apr/2021 12:03:15

புதுக்கோட்டை, ஏப் : புதுக்கோட்டையிலுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா இயங்கவில்லை: திருமயம்  தொகுதி திமுக வேட்பாளர்  ரகுபதி புகார் தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியிலுள்ள வாக்கு எண்ணும் மையத்தை சனிக்கிழமை நேரில் பார்வையிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினரும் திருமயம் தொகுதி திமுக வேட்பாளருமான ரகுபதி மேலும் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கான  வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறையில் பின்பக்கத்தில் சிசிடிவி கேமரா இயங்கவில்லை. இதனால் பின்பக்கம் வழியாக வாக்குப்பதிவு இயந்திரத்தை அதிமுக பாஜக தேர்தல் அதிகாரிகள் துணையோடு மாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உடனடியாக அதைச் சீர் செய்யாவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

சிசிடிவி கேமரா பதிவு நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் மூன்று கேமராக்கள் வேலை செய்யவில்லை முக்கியமாக இந்த மூன்று கேமராவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பின்புறத்தில் உள்ளவை.

இதனால் பின்பக்க வழியாக வந்து அதிமுக- பாஜக வினர் தேர்தல் அதிகாரிகள்  துணையோடு வாக்குப் பெட்டிகளை மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் சிசிடிவி கேமரா முறையாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படும். இதுகுறித்து ஆட்சியரிடம் முறையீடு செய்துள்ளோம் என்றார் ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதி தேர்தலில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் இடமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..


Top