logo
தமிழகத்தில்  தீய சக்தியையும், துரோக சக்தியையும் ஆட்சிக்கு வர விடாமல் செய்ய வேண்டும்: அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன்

தமிழகத்தில் தீய சக்தியையும், துரோக சக்தியையும் ஆட்சிக்கு வர விடாமல் செய்ய வேண்டும்: அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன்

26/Mar/2021 11:28:07

ஈரோடு மார்ச்:   தமிழகத்தில்தீய சக்தியையும், துரோக சக்தியையும்  மீண்டும்  ஆட்சிக்கு வர விடாமல் செய்ய வேண்டும் என்றார் அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன்.

ஈரோடு மாவட்டம் நசியனூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பேசியதாவது:  கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தின் கஜானாவை காலி செய்து, 6 லட்சம் கோடி கடனில் தள்ளாட வைத்துள்ளனர். அதிமுகவினர் பண மூட்டையை நம்பி தேர்தலில் நிற்கின்றனர். ஆடு,மாடுகளை விலைக்கு வாங்குவதுபோல், வாக்குகளை வாங்க அமைச்சர்கள் ரூ 300 கோடி வரை செலவழிக்க வுள்ளனர். மற்ற தொகுதிகளில் ரூ 50 கோடிக்கு குறைவில்லாமல் செலவு செய்ய திட்டமிட் டுள்ளனர்.

மக்களின் வரிப்பணம் உங்களிடம் வருவதால் வாங்கிக் கொள்ளுங்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குக்கு 10 ஆயிரம் கொடுத்தார்கள். ஆனால், வாக்காளர்கள் என்னைத் தான் வெற்றி பெற வைத்தார்கள். எனவே, மக்கள் தங்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு,  வாக்கினை மாற்றிப் போடுவார்கள். மக்கள் சரியான முடிவெடுப்பார்கள். தமிழின துரோக கூட்டணியை ஓட, ஓட விரட்டுவார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக இலவு காத்த கிளியாய் திமுகவினர் உள்ளனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்து விடாதீர்கள். ஏற்கெனவே இந்த ஆட்சியாளரகள் கஜானாவை காலி செய்து வைத்து இருப்பதால், திமுகவினர் ஆட்சிக்கு வந்தால், பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடி விடுவார்கள். தீய சக்தியையும், துரோக சக்தியையும் ஆட்சிக்கு வர விடாமல் செய்ய வேண்டும்.

அதிமுக அறிவித்துள்ள இலவச திட்டங்களைச் செயல்படுத்த மாதம் ரூ.50,000 கோடி வேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால், அமமுக தேர்தல் அறிக்கையில் நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை மட்டும் அறிவித்துள்ளோம். இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றியது போதும். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுத்தால் தமிழகம் முன்னேறும். 


அமமுக ஆட்சிக்கு வந்தால்,மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் தடுக்கப்படும். காவிரி பாயும் பகுதியின் இரு கரைகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். அங்கு தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்கப்படாது. நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

ஈரொடு கிழக்கு தொகுதியில் பொதுசுத்திகரிப்பு ஆலையம் அமைக்கப்படும். வருங்கால சந்ததியைப் பாதிக்கும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். நெசவாளர்களுக்கான நூல்விலையை அரசு நிர்ணயிக்கும். கமிஷன், புரோக்கர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வாருங்கள். தமிழகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்றார் டிடிவி. தினகரன்.

Top