27/Sep/2020 11:29:06
by p.raj-
erode ஈரோடு மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிவு நீர்க்கால்வாய்கள் தூர்வாரப்பட்டு 20 ஆண்டுகள் ஆனநிலையில் தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் மற்றும் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நேற்று தொடங்கியது. மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவுபடி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப்புகளை பொக்லைன் இயந்திரத்தை கொண்டு இடித்தனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கடைகள், விளம்பர போர்டுகளை அகற்றி அதனை வெண்டிபாளையத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்றனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ள . சாக்கடை கால்வாய் மற்றும் ரோட்டை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், 1000 லோடு மண் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.