logo
ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 10 லட்சத்து 39 ஆயிரம் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 10 லட்சத்து 39 ஆயிரம் பறிமுதல்

12/Mar/2021 08:49:33

ஈரோடு மார்ச்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசிபாளையம்ää வடுகபாளையம் ஆகிய இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 10 லட்சத்து 39 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், திருவானைக்கோயில் பகுதியை சேர்ந்த வாழை வியாபாரம் செய்து வரும் முத்தமிழ்செல்வன் என்பவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள சம்ராஜ்நகரில் டிராக்டர் வங்குவதற்காக அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது அந்த வழியாக முத்தமிழ்செல்வன் வந்த ஆட்டோவை சோதனை செய்த போது டிராக்டர் வாங்குவதற்காக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அதே போன்று கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வடுகபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் இருந்த போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது மினி லாரியில் இருந்த கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சித்திக் என்பவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள விவசாயிகளிடம்  வாழைத்தார்கள் வாங்குவதற்காக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற 69 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இவ்விரு பணங்களையும் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Top