logo
 தமிழ்நாட்டை ஏலம் போட்டு விற்பவர்களுக்கும் விரைவில் பரிசு காத்திருக்கிறது-கமல்

தமிழ்நாட்டை ஏலம் போட்டு விற்பவர்களுக்கும் விரைவில் பரிசு காத்திருக்கிறது-கமல்

14/Oct/2020 01:08:16

சென்னை: தமிழ்நாட்டை ஏலம் போட்டு விற்பவர்களுக்கும் விரைவில் பரிசு காத்திருக்கிறது   என்று  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை  ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அறிஞர்களான பால் ஆர்.மில்கிரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கும் ஏலக்கோட்பாட்டின் மேம்பாடுகள் மற்றும் புதிய வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் பரிசு காத்திருக்கிறது என்று தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மற்றுமோர் பதிவில், மக்கள் உரிமைகளை மையமாக கொண்ட அரசு அமைய வேண்டும். மக்கள் நீதி மய்யம் அதைச் செய்யும் என்று கூறியுள்ள கமல்ஹாசன், பட்டியலின ஊராட்சி தலைவர்கள் அவமானப்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பெரியார் மண்  என்று பெருமை பொங்கப்பேசுகிறோம். இதுவா பெரியார் பேசிய சமத்துவம் என்று  அதில் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார் 

     

Top