12/Mar/2021 08:42:46
ஈரோடு, மார்ச்: தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் பொது பார்வையாளர்களாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விஷால் ககன், ஈரோடு மேற்கு தொகுதிக்கு அடோனு சட்டர்ஜி, மொடக்குறிச்சி ,பெருந்துறை தொகுதிகளுக்கு மனோஜ் குமார், கோபி, பவானி சாகர் தொகுதிகளுக்கு நர்பு வாங்டி புடியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செலவின பார்வையாளர்களாக கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு அரூப் சட்டர்ஜி, மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதிகளுக்கு சஞ்சீவ் குமார் தேவ், அந்தியூர் கோபி தொகுதிகளுக்கு அர்ஜூன் லால் ஜட் மற்றும் பவானி, பவானி சாகர் தொகுதிகளுக்கு பவானி சங்கர் மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காவல் பார்வையாளராக 8 தொகுதிக்கும் சுனில்குமார் நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் இன்று வருகை தந்த செலவின பார்வையாளர்களான கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிக ளுக்கு அரூப் சட்டர்ஜி, மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதிகளுக்கு சஞ்சீவ் குமார் தேவ், அந்தியூர் கோபி தொகுதிகளுக்கு அர்ஜூன் லால் ஜட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடுக்கு வெள்ளிக்கிழமை வந்த அனைவரையும் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சி. கதிரவன் , காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் அனைத்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து தொகுதிகள் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.