logo
சட்டமன்ற தேர்தல் முடியும் வரை போலீஸாருக்கு விடுமுறை  கிடையாது:தமிழக டிஜிபி உத்தரவு

சட்டமன்ற தேர்தல் முடியும் வரை போலீஸாருக்கு விடுமுறை கிடையாது:தமிழக டிஜிபி உத்தரவு

10/Mar/2021 09:51:14

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வழக்கம்போலவே பாதுகாப்பு பணிகள், ரோந்து பணிகள், சோதனை பணிகள் உள்ளிட்டவற்றில் போலீஸார்  ஈடுபட்டு வருகின்ற இருக்கின்றனர். இதுபோக, வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் இடங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளிட்டவற்றில் போலீசாரின் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிவடையும் வரை போலீஸாருக்கு விடுமுறை இல்லை என தமிழக டிஜிபி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் வரை போலீஸ் அதிகாரிகளுக்கு விடுமுறையோ, அனுமதியோ வழங்கப்படாது என அறிவித்துள்ளார்.


Top