07/Mar/2021 05:22:35
புதுக்கோட்டை அருள்மிகு ஆஞ்சநேயர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை தெற்கு 4-ஆம் வீதியில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் அமாவாசை வழிபாடு மண்டபத்தில் அனுமன் திருச்சபை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை மூத்த வழக்குரைஞர் எஸ். சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார்.
திருவாசக பாடல்களை பூர்ண செந்தில், பி.தயாளன், வினயகம், நாகரத்தினம், ,தாமோதரன், ஆன்மிக நெறியாளர் ஆனந்த் உள்ளிட்டோர் பாடினார்கள் . இதையொட்டி சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது.
நிகழ்வில், கார்த்திக் மெஸ் மூர்த்தி, அழகேசன், பாலாஜி,கோபி,சடையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முற்றோதல் நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அருட்பிர சாதம் வழங்கப்ப ட்டது. ஏற்பாடுகளை அனுமன் திருச்சபை நிர்வாகிகள் செய்தனர்.