logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழையை எதிர்க்கொள்ளஅனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஆட்சியர்பி.உமாமகேஸ்வரி  தகவல்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழையை எதிர்க்கொள்ளஅனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஆட்சியர்பி.உமாமகேஸ்வரி தகவல்.

04/Dec/2020 09:34:45

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மழைநீர் செல்லும் வரத்து வாய்க்கால்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி 3.12.202 -இல்  நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை எச்சரிக்கையை தொடர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் மழைநீர் வாய்க்கால்கள் வழியாக செல்லும் வகையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 


இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி புதிய பேருந்துநிலையம் அருகில் உள்ள வாய்க்கால், பெரியார் நகர், கம்பன் நகர், வரத்து  வாய்க்கால்கள், சந்திரமதி கால்வாய், காட்டுப்புதுக்குளம் வரத்து வாரி போன்ற பல்வேறு பகுதிகளில் மழைநீர் செல்லும் வாய்க்கால்கள் மற்றும் தாழ்வான பகுதிகள்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்;டது. 

மேலும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத  வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட  அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


 புதுக்கோட்டை நகராட்சியில் கூடுதல் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி அதிகப்படுத்த பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கையின் அடிப்படையில் இத்திட்டத்திற்கு தேவையான திட்ட மதிப்பீடு தயார் செய்ய நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்;டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் தற்பொழுது பெய்துவரும் மழை காரணமாக  சுமார் 500 பொதுமக்கள் தங்கி உள்ளனர். இவர்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அலுவலா;கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையின் மூலம் அனைத்து நீர் நிலைகளும் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் ஏரிகள், குளங்களிலும் மழைநீர் நிரம்பி எவ்வித தடையின்றி  மழைநீர் வெளியேறும் வகையில் தேவையான நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


புதுக்கோட்டை மாவட்டத்தில் 77 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களிலுள்ள பள்ளி கட்டடங்கள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தங்குதடையின்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு குறித்து  மக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு மூலம் வழங்கப்படும் அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். 


மாவட்டத்தில் தற்பொழுது மழைக்காரணமாக சிறியளவில் தண்ணீர் தேங்கியுள்;ள பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் வீட்டிலுள்ள முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக கவரில் பத்திரப்படுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தற்பொழுது பாதுகாப்பு மையங்களுக்கு வருகை புரிந்து வருகின்றனர். இம்மையங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 


தரைப்பாலங்கள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று ஏரி குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் ஏற்கெனவே உள்ள ஆயிரம் மணல் மூட்டைகளுடன் தற்பொழுது கூடுதலாகவும் மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழையை எதிர் கொள்ள தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தகவல்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும்  கட்டுப்பாட்டு மையத்தினை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 04322 222207 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் அளிக்க  பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.


இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய  அலுவலர்கள்  உடனிருந்தனர்.


Top