25/Feb/2021 08:14:18
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு அளிக்கும் முகாமில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளரும், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான பெரியண்ணன் அரசு விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை நகர திமுக செயலாளர் க.நைனா முகமது, 41 -ஆவது வட்ட செயலாளர் முத்துக்கருப்பன், மற்றும் கந்தர்வகோட்டை தனித்தொதிக்கு நகரக் கழக துணைச் செயலாளர் த.அப்புக்காளை ஆகியோரும் விருப்பமனு தாக்கல் செய்தனர்
நிகழ்ச்சியில், மாவட்ட தொ.மு.ச தலைவ ர்ஆ. ரத்தினம், செயலாளர் க.கணபதி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு, செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மணிமொழி மனோகரன், நகர துணை செயலாளர் மதியழகன், தட்டாம்பட்டி ஆறுமுகம், எம்.சுந்தரம், ஆசிரியர் ஜான் வில்லியம், வட்டச் செயலாளர் விஜயகுமார், ஏ.சாதிக் பாட்சா, பீர் முகமது, இளைஞரணி அமைப்பாளர் பி.ஹரிஹரன், ரியாஸ் கான், வட்டப்பிரதிநிதி கணேசன், சந்தானம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கண.மோகன்ராஜா, எஸ்.பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்