logo
கணவரின் சொத்துகளை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி் இளம்பெண் எஸ்.பி. அலுவலகத்தில் மனு

கணவரின் சொத்துகளை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி் இளம்பெண் எஸ்.பி. அலுவலகத்தில் மனு

18/Feb/2021 06:25:25

ஈரோடு, பிப்:ஈரோடு கருங்கல்பாளையம் வாட்டர் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் தேவி ( 31). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரரான தனது மகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து  புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது: எனது கணவர் பெயர் வெங்கடாசலம். நாங்கள் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார்.திருமணம் ஆனவுடன் கணவரின் சொந்த ஊரான கரூர் மாவட்டம், ஓமந்தூருக்கு சென்று விட்டோம்.

இந்நிலையில் என் கணவருக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டார். இந்த சமயத்தில் எனது கணவரின் உறவினர் ஒருவர் எனது கணவர் பெயரில் டிராக்டர் ஒன்றை எடுத்து தருமாறு கூறினார். அந்த டிராக்டரை நான் விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறேன் உங்களுக்கு மாதாமாதம் பணம் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார். 

இதை நம்பி நான் ரூ .1லட்சம் ரொக்கம், எனது கணவரின் பெயரில் வங்கியில் 10 பவுன் நகையை அடமானம் வைத்து பணம் கொடுத்தோம். இந்நிலையில் என் கணவர் திடீரென இறந்துவிட்டார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எனது கணவரின் உறவினர் எனது கணவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை அபகரித்துக் கொண்டார். 


என் கணவரின் மற்றொரு உறவினர் மகன் என் கணவருக்கு சேரவேண்டிய சொத்துக்களுக்கு நான்தான் வாரிசு என்றும் உங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றும் எங்களிடம் கூறினார். இவருக்கு உடந்தையாக மற்றொரு உறவினரும் சேர்ந்து கொண்டு எனது கணவரின் செல்போனை அபகரித்துக் கொண்டனர். எனக்கும் என் கணவருக்கும் சொந்தமான பொருட்களையும் வாகனங்களையும் தருமாறு பலமுறை கேட்டும் அவர்கள் தராமல் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

 எனவே எனது கணவரிடம் இருந்து அபகரித்துக் கொண்ட பணம் நகை செல்போன் இருசக்கர வாகனம் ஆகியவற்றை மீட்டு எங்களிடம் தர வேண்டும். எங்களிடம் மோசடியில் ஈடுபட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார். மனு அளிக்கும் நிகழ்வின்போது இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

Top