logo
உணவே மருந்து... உருளைக்கிழங்கு…

உணவே மருந்து... உருளைக்கிழங்கு…

13/Feb/2021 08:12:56

புளிப்பு சுவையுடன் கூடிய உருளைக்கிழங்கு... அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அனைவரும் அதிகம் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று.

குழந்தைகள் உணவு: அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும். அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவு.


உருளைக்கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால் ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் முற்றிலும் தடுக்கிறது. ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.


உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்கு பசைபோல் அரைத்து பசும்பாலில் கலந்து, முகத்தில் தடவிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கின்ற எண்ணெய் பசைகள் நீங்குகிறது. முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்படுவதை முற்றிலும் தடுத்து முக அழகை கூட்டுகிறது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமைத் தோற்றத்தை அதிகரிக்கிறது. தோல் கடினமாக மாறுவதை தடுத்து ஈரப்பத தன்மையுடனும், மிருதுவாகவும் இருக்குமாறு செய்கிறது.


உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் சி மற்றும் கரோட்டின் சத்துக்கள், ஸ்கர்வி நோய் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே தான் இந்த வைட்டமின்- சி சத்து அதிகம் நிறைந்த உருளைக்கிழங்குகளை சிறு குழந்தைகள் அடிக்கடி சாப்பிடக் கொடுப்பதால் அவர்களுக்கு ஸ்கர்வி நோய் ஏற்படும் ஆபத்து வெகுவாகக் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.


 உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. அதேநேரம் பொட்டாசியம் ரத்தத்தில் பிராணவாயு கிரகிக்கும் தன்மையை அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் போன்ற குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. எனவே ரத்த அழுத்த குறைபாடு இருப்பவர்கள் சீரான அளவில் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வருவது சிறப்பானது..


நமது மூளை சுறுசுறுப்பாக இயங்குவது குளுக்கோஸ் சர்க்கரை சத்துக்கள்.மேலும் அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், அதிக அளவு பிராண வாயு போன்ற காரணிகளும் மூளையின் சீரான இயக்கத்திற்கு அடிப்படைக் காரணிகளாக இருக்கிறது. மேற்கூறிய அனைத்து அத்தியாவசிய சத்துக்களை உருளைக்கிழங்கு கொண்டிருக்கிறது. உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடும் நபர்களுக்கு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து ரத்தத்தில் கிடைக்கப் பெற்று உடல் மற்றும் மனச்சோர்வை போக்கி, மூளையை மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது.


உருளை கிழங்கிலும் சிறுநீரக கற்களை உருவாக்கும் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருந்தாலும், அந்த கால்சிய சத்துகளை கரைக்கக்கூடிய மக்னீசிய சத்துகளும் அதிகம் இருப்பதால் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க நினைப்பவர்கள், ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் அவ்வப்போது சரியான அளவில் உருளைக்கிழங்குகளை வந்தால் வெகு விரைவில் அவர்கள் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைத்து, அவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றி விடுகிறது.


புற்று நோயை தடுக்கக்கூடிய சக்தி கொண்ட உணவுகளில் ஒன்றுஉருளைக்கிழங்கு:

வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. மேலும் சியாசாந்தின் மற்றும் கரோட்டின் சத்துகளும் இருக்கின்றது. இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை அணுக்களை உருவாகாமல் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது. உருளைக்கிழங்குகள் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் உள்ளடங்கியுள்ளது. மேலும் மிகக் குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்துக்களை கொண்டது.


உருளைக்கிழங்குகள் பாலாடைக்கட்டி, வெண்ணை சேர்த்து சமைக்கப்பட்டு உண்ணப்படும் போது மனிதர்கள் குறுகிய காலத்திலேயே உடல் எடை அதிகரித்து ஆரோக்கியமான நிலையை அடைவார்கள். உருளைக்கிழங்கில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் விட்டமின் சி சத்துக்கள் ஆகியவை இருக்கின்றன. உடலில் கார்போஹைட்ரேட் சத்துக்களை அதிகம் தந்து விரைவில் உடல் மற்றும் மன சோர்வு ஏற்படாமல் தடுக்கிறது. 


மனித இதயம் சீராக செயல்படுவதற்கு பொட்டாசியம் சத்து ஒரு அவசியத் தேவையாக இருக்கிறது. உருளைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர உருளைக்கிழங்கில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதயம் ஆரோக்கியமாக இயங்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை உருளைக்கிழங்கு உணவுகளை சாப்பிடுவது நன்மையை ஏற்படுத்தும்.

அதேசமயம் உருளைக்கிழங்கில் உள்ள தீமைகளையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்:

 சாதாரணமாக உருளை கிழங்கு ஒரே நிறத்தில் இருந்தால் அதில் எந்த ஆபத்தும் இல்லை. அதற்கு மாறாக, உருளை கிழங்கு பச்சை நிறத்தில் மாறி இருந்தால் அதை சாப்பிடக்கூடாது. இதில் தான் ஒளிந்திருக்கிறது ஆபத்து. சூரிய ஒளிப்படும் இடங்களில் அதிக நேரம் இருப்பதால் உருளைக்கிழங்கு மீது பச்சை நிறத் திட்டுகள் உண்டாகிறது.  இதில் கிளைகோல்கலாய்ட் இருப்பதால், இது தீங்கான ஒன்றாக மாறுகிறது. இதை சாப்பிடும் போது நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

நச்சுப்பொருட்கள் உள்ள முளை வந்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும்போது தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, டயேரியா போன்றவை ஏற்படும். முதலில் பலவீனமாக இருக்கும், பின் கோமா நிலையை அடைந்து அரிதாக சிலருக்கு மரணம் கூட ஏற்படும் அபாயம் உண்டு.

மேலும் கருவுற்ற தாய்மார்கள் கண்டிப்பாக இவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர் உணவு மருத்துவ ஆய்வாளர்கள். எனவே நாம் உண்ணும் உணவில் உள்ள நன்மை தீமைகளை நன்கு புரிந்துகொண்டு உணவுகளை சுகாதார முறையில் சமைத்து உண்டு நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு முயற்சி செய்யலாமே. தொகுப்பு: சங்கரமூர்த்தி- 73731 41119. 

                                                   

        

Top