logo
அருட்கரியகாளியம்மன்கோயில் குண்டம் திருவிழாவில் 18 கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

அருட்கரியகாளியம்மன்கோயில் குண்டம் திருவிழாவில் 18 கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

04/Feb/2021 05:47:04


ஈரோடு, பிப்: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் கோராக்காட்டூர் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ந அருட்கரியகாளியம்மன்கோயில் குண்டம் திருவிழாவில் 18 கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் கோராக்காட்டூரில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருட்கரியகாளியம்மன்கோயில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். 

அதுபோல் இந்தாண்டும்  கடந்த மாதம் 20-ஆம் தேதி பூச்சாற்றுதலுடன் திருவிழா தொடங்கியது. அதனைத்தொடந்து இம்மாதம் பிப்.1-ஆம் தேதி கிராமசாந்தியும் 2-ஆம் தேதி கொடியேற்றம் சந்தனகாப்பு மற்றும் சுமங்கலியாக பூஜை நடைபெற்றது. 3-ஆம் தேதி குண்டத்திற்கு கரும்பு கொண்டு வருதல் குண்டம் திறப்பு பொங்கல் வைத்தல் மற்றும் தீ மூட்டுதல் போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து 4-ஆம் தேதியான இன்று அதிகாலை அம்மை அழைத்தல் வாக்கு கேட்டல் நிகழ்வுகளை தொடர்ந்து திருக்கோடி ஏற்றப்பட்டு குண்டத்திற்கு சிறகப்பு பூஜைகள் செய்த பின்னர் தலைமை பூசாரி சண்முகம் முதலில் தீக்குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். 

அதனை தொடர்ந்து பூசாரிகள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் என 18 கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். சில பெண் பக்தர்கள் அக்னி சட்டியுடனும் அழகு குத்தியும் கைகளில் வேப்பில்லை ஏந்தியும் தீக்குண்டம் இறங்கினர். தீக்குண்டம் இறங்கிய பக்தர்கள் அனைவருக்கும் அருட்கரியகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து அருள்பலித்தார்.

 இவ்விழாவிற்கு சிறுவலூர் காவல்துறையினர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் குண்டம் இறங்கி வெளியேறிய பக்தர்களுக்கு கோயில் அறங்காவலர் குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவினை தொடந்து 5-ஆம் தேதி தேர் உற்சவ நிகழ்சியும் 6-ஆம் தேதி முத்துப்பல்லக்கு கரகாட்டம் வாணவேடிககை நிகழ்சியும் நடைபெறவுள்ளது. பிப்.7-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது

Top