02/Feb/2021 03:46:11
ஈரோடு பிப்: ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சைகள் செய்யலாம் என்று மத்திய அரசு வெளியிட்ட உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் மருத்துவர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்: 2030 -ஆம் ஆண்டிற்குள் மத்திய அரசு ஒரே தேசம் , ஓரே மருத்துவ முறையை கொண்டு வர உள்ளதை கண்டித்து ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் சி என் ராஜா தலைமையில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100 -க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் திட்டங்களால் மக்களின் ஆரோக்கியத்தோடும் உயிரோடு விளையாடுவது போன்றது என்றும் , எனவே திட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.தமிழகம் முழுவதும் 14 நாட்கள் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் மருத்துவ சேவை பாதிக்கப்படாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்