logo
ஜன-28 முதல் வியாழன் தோறும் தேங்காய், நிலக்கடலை ஆகியவை மறைமுக ஏல முறையில் விற்பனை

ஜன-28 முதல் வியாழன் தோறும் தேங்காய், நிலக்கடலை ஆகியவை மறைமுக ஏல முறையில் விற்பனை

21/Jan/2021 11:20:23

ஈரோடு, ஜன:ஈரோடு மாவட்டம் மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வரும் 28.1.2021 முதல் வியாழன் தோறும் தேங்காய், நிலக்கடலை ஆகியவை மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெறவுள்ளது.


இந்த ஏலத்தில் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் போட்டி விலை மூலம் கொள்முதல் செய்யலாம். நிலக்கடலை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள், கல், மண், துாசி நீக்கி, தரம் பிரித்து புதன் கிழமை மாலை, 4 மணிக்குள் கொண்டு வர வேண்டும்.

தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள், தரம் பிரித்து வியாழன் அன்று காலை, 8 மணிக்குள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வர வேண்டும். விற்பனையாகும் விளை பொருளுக்கான தொகை, விவசாயியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். எனவே, விவசாயிகள், தங்களது வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முகப்பு பக்கம் நகல் வழங்க வேண்டும்.

விற்பனை கூடத்தில், 3,340 டன் கொள்ளளவு கொண்ட, மூன்று சேமிப்பு கிடங்குகள் உள்ளன. குறைந்த வாடகையில் விளை பொருட்களை இருப்பு வைத்து, குறைந்த வட்டியில் பொருளீட்டு கடன் பெற வழி வகை செய்யப்படும்.

Top