logo
திராவிடர் கழகத்தின் மீது பாமக காவல்துறையில் புகார்.

திராவிடர் கழகத்தின் மீது பாமக காவல்துறையில் புகார்.

23/Sep/2020 07:51:51

ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் இன்று ஈரோடு எஸ்.பி .அலுவலகத்திற்கு சென்று எஸ்.பி. தங்கதுரையை சந்தித்து  புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியருப்பது: புதுச்சேரி  பிள்ளையார் தோட்டம் காமராஜர் சாலையில் கடந்த 17-ஆம் தேதி பெரியார் சிலைக்கு சிலர் மாலை அணிவித்தனர் . அப்போது, வன்னியர் சங்கத்தையும்பாட்டாளி மக்கள் கட்சியினரையும்   அவதூறாக பேசி கோஷம் எழுப்பி உள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில துணைத்தலைவர்கள் எஸ்எல். பரமசிவம், எம்.பி. வெங்கடாசலம், முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆறுமுகம் மாவட்ட செயலாளர்கள் பிரபு , ராசு, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பெருமாள், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் கோவிந்தன், மாநில துணைத்தலைவர் சக்தி உள்பட  பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Top