logo
பிரிட்டனுக்கு ஜனவரி 8 முதல் விமான சேவை தொடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

பிரிட்டனுக்கு ஜனவரி 8 முதல் விமான சேவை தொடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

01/Jan/2021 10:03:31

புதுதில்லி: பிரிட்டனுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, இந்தியா - பிரிட்டன் இடையே டிசம்பர் 22-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி முதல் ஜனவரி 7-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை தற்காலிகமாக தடை விதிக்கப் பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்தியா-பிரிட்டன் இடையே ஜனவரி 8-ஆம் தேதி முதல் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட வுள்ளது. இருப்பினும், ஜனவரி 23-ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் வாரத்திற்கு 15 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். 

மேலும், இந்த விமானங்கள் அனைத்தும், தில்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த 29 பேருக்கு புது வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Top