26/Dec/2020 08:44:18
புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரத்தில் அமைந்துள்ள ராஜகுருஸ்ரீ மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ணன் சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் உலக நன்மைக்காகவும் உலக மக்கள் நலம் வேண்டியும் கோபால கிருஷ்ணன் சாஸ்திரிகள் அருளாசிகளுடன் சிறப்பு ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் மங்கள இசையுடன் கணபதி பூஜை, புண்யாஹ வாசனம், பூஜை, கலச ஆவாஹனம், பாராயணம், பிரஹ்ம்மசாரி பூஜை, தம்பதி பூஜை, சுஹாசினி பூஜை, லெட்சுமிபூஜை . மற்றும் சிறப்பு ஹோமம் மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ சிவன், காசிவிஸ்வநாதர் ஸ்ரீ விசலாட்சி அம்மபாளுக்கும் விநாயகப்பெருமான் சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி போன்ற அபிஷேகத்துடன் கலசாபிஷேகம் தீபாஆராதனை நடைபெற்றது.
நிகழ்வில் ராஜகுருஸ்ரீ மஹாபாஷ்யம் கோபால கிருஷ்ணன் சாஸ்திரிகள், அதிஷ்டான நிர்வாகிகள் சென்னை சந்திரசேகர், ஊராட்சி தலைவர் சங்கர் சுந்தர்ராஜன் என்ற மணி, கடியப்பட்டி சேகர் ராமச்சந்திரன், தேவகோட்டை நாராயணன், கிருஷ்ணகுமார், முத்துக்குமார் கார்த்திகேயன் ராஜா , நீலம்.ராஜேஸ்வரி அறங்காவலர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அதிஷ்டான நிர்வாகிகள் செய்திருந்தனர்.