logo

தண்டாயுதபாணி கோயிலில் சஷ்டி வழிபாடு

23/Sep/2020 07:26:22

புதுக்கோட்டை அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

          புதுக்கோட்டை மேலராஜ வீதிலுள்ள  அருள்மிகு ண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சஷ்டியை  முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சுவாமிக்கு  காலையில்  பாலபிஷேகம், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம்,மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம்  தீபாராதனை நடந்தது மாலையில் சந்தனக்காப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு  தண்டாயுதபாணி சுவாமிஅருள் பாலித்தார். திரளான பக்தர்கள் வருகைதந்து  தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை, பாலு குருக்கள், கோயில்  பணியாளர்கள் செய்திருந்தனர்.        

Top