logo
நகைக்காக பெண்ணை எரித்து கொலை செய்த வழக்கு: அறந்தாங்கி இளைஞருக்கு ஆயுள் தண்டனை

நகைக்காக பெண்ணை எரித்து கொலை செய்த வழக்கு: அறந்தாங்கி இளைஞருக்கு ஆயுள் தண்டனை

15/Mar/2021 09:07:15

புதுக்கோட்டை மாவட்டம்,  அறந்தாங்கி அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்து எரித்த  இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 80 ஆயிரம் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகுடி காவல் நிலையத்திற்கு உள்பட்ட  காரக்கமங்கலம் கிராமத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு என்ற சரஸ்வதி(47) பெண்ணை நகைக்காக கொலை அதே பகுதியைச் சேர்ந்த டெக்ஸ் அரவிந்தன் (26) என்ற இளைஞர் கொலை செய்துவிட்டு சடலத்தை எரித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 6 ஆண்டு காலமாக புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து  குற்றவாளி டெக்ஸ் அரவிந்தனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 80 ஆயிரம்  அபதாரம் விதித்து  புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். இதனையடுத்து குற்றவாளி அரவிந்தனைபோலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Top