logo
ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்.. இதெல்லாம் மாறப்போகுது

ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்.. இதெல்லாம் மாறப்போகுது

22/Dec/2020 02:04:55

இன்னும் ஒரு வாரத்தில் இந்த மாதம் மட்டுமல்ல 2020-ஆம் ஆண்டே முடிவுக்கு வரப்போகிறது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் புத்தாண்டு தொடங்குகிறது. இந்நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் பல்வேறு புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அவற்றை பார்க்கலாம்.

2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதிக்கு முன் விற்பனை செய்யப்பட்ட அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்ட் டேக் (FASTag) கட்டாயம் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜனவரி 1-ஆம் தேதி முதல் FASTag கட்டாயம்.

செக் பரிவர்த்தனை: இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து வங்கிகளிலும் செக் பரிவர்த்தனைகளுக்கு பாசிடிவ் பே எனப்படும் புதிய முறை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கிறது. இதன்படி, ரூ.5000 -க்கு மேலான செக் பரிவர்த்தனைகளுக்கு செக் எண், தேதி, பணம் பெறும் நபரின் பெயர் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் வெரிபிகேஷன் செய்யப்பட வேண்டும்.

கார்டு பரிவர்த்தனைகள்: தொடர்பில்லா கார்டு (contactless card) பரிவர்த்தனைகளுக்கான வரம்பை ரூ.2000 -த்தில் இருந்து 5000 ரூபாயாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி: சிறு நிறுவனங்கள் எளிமையாக ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறை அமலுக்கு வருகிறது. புதிய விதிமுறைப்படி, ரூ.5 கோடிவரை வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் நான்கு ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்தால் போதும். தற்போது 12 ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வாட்சப் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பழைய ஆண்ட்ராய்ட் மற்றும் iOS தளங்களுக்கு வாட்சப் செயலிக்கான ஆதரவு வழங்கப்படாது என வாட்சப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Top