logo
புதுக்கோட்டையில் மேலும் 89 பேருக்கு கரோனா: ஒருவர் பலி

புதுக்கோட்டையில் மேலும் 89 பேருக்கு கரோனா: ஒருவர் பலி

22/Sep/2020 06:30:32

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,343 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 95 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,408 ஆக உள்ளது. ஒருவர் சாவு:கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 63 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 810 ஆக உள்ளது.


Top