logo
தனியார் ஜவுளி நிறுவன சூப்பர்வைசரை கத்திரிக்கோலால் குத்திய டெய்லர் கைது

தனியார் ஜவுளி நிறுவன சூப்பர்வைசரை கத்திரிக்கோலால் குத்திய டெய்லர் கைது

13/Dec/2020 08:10:53

ஈரோடு- டிச : சேலம் மாவட்டம், அன்னதானபட்டி புட்டா மிஷின் தெருவைச் சேர்ந்தவர் சுரேந்தர் (37). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். அதே ஜவுளி நிறுவனத்தில் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (36) என்பவர் டெய்லராக பணிபுரிந்து வருகிறார்.

சனிக்கிழமை  இரவு வழக்கம்போல் ஜவுளி நிறுவனத்தில் அனைவரும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சுரேந்தருக்கும் மூர்த்திக்கும் வேலை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து சுரேந்தர் கழுத்தில் குத்தினாராம். இதில் சுரேந்தர் ரத்த வெள்ளத்தில் கீழே  விழுந்தார். 

உடனே வேலை பார்த்தவர்கள் சுரேந்தரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.இந் நிலையில், மேல் சிகிச்சைக்காக சுரேந்தர்  சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Top