logo
நிச்சியிக்கப்பட்ட பெண் மாயம்: மச்சிணியியை மணந்த இளைஞர்.

நிச்சியிக்கப்பட்ட பெண் மாயம்: மச்சிணியியை மணந்த இளைஞர்.

11/Dec/2020 04:21:19

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானதால், அப்பெண்ணின் தங்கையை இளைஞர் திருமணம் செய்துகொண்டார்.

ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை விடுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜ்குமார்(30). இவருக்கும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள மருங்கபள்ளத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் துர்காதேவிக்கும் (24) திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஆலங்குடியில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருந்த நிலையில், துர்காதேவி இருதினங்களுக்கு முன்பு மாயமானார். இந்த தகவல் அறிந்து ராஜ்குமாரின் வீட்டார் அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து பெண் வீட்டாரிடம் கேட்க, அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி துர்காதேவியின் சகோதரியான ஆஷிபாவை(18) திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதை மணமகன் ராஜ்குமாரும் ஏற்றுக்கொண்டுள்ளார். தொடர்ந்து, ராஜ்குமார், ஆஷிபா ஆகியோரது திருமணம் திருமணம் நடைபெற்றது.

 

 

Top